CINEMA
அவள் அழுதால் நானும் அழுதிருவேன்… கடந்த 5 வருஷமா அவளோடு… சமந்தா குறித்து சுதா கொங்கரா உருக்கம்..!!

முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த சில வருடம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெரிதும் படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் கூட அவருடைய முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்து கொஞ்சம் கூட குறையவில்லை. தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த சமந்தா இப்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். படங்கள், வெப்சிரிஸ் என பட்டையை கிளப்பி வரும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சிட்டாடல் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இருப்பினும் சமந்தா பாராட்டப்பட்டார்.
விரைவில் சமந்தா அட்லீ -அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராம்சரண் – சுகுமார் கூட்டணியில் உருவாக உள்ள ஒரு படத்திலும் சமந்தா நடிக்க போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் சமந்தா கலந்து கொண்டார். அப்போது பேசிய இயக்குனர் சுதா கொங்கரா, “நான் சமந்தாவின் மிகப்பெரிய ரசிகை. கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் Touch-ல் இருக்கிறேன். அவர் அழுதால் நானும் அழுவேன். சமந்தா எதிர்த்து போராடும் விதம் எனக்கு பலம் தருகிறது. அவள் ஒரு இன்ஸ்பிரேஷன் மற்றும் எனக்கு சமந்தாவின் ஊ அண்ட்டாவா பாடல் மிகவும் பிடிக்கும். சமந்தாவை வைத்து விரைவில் ஒரு படம் எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.