CINEMA
“இதயத்தை நொறுக்கும் செய்தி” பகல்ஹாம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா வேதனையுடன் வெளியிட்ட பதிவு..!!

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலமான பஹல்காம் என்ற பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த கொடிய தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிப்பதற்கு ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது போன்ற சம்பவம் இனியும் யாருக்கும் நடக்கக்கூடாது என்று சூர்யா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இதயத்தை நொறுக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. இனி யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும்” என்று கூறியுள்ளார்.