CINEMA
எனக்கே வெட்கமா இருக்கு… நான் ஏன் இவ்ளோ மோசமா நடிச்சிருக்கேன்.. நடிகை சமந்தா வேதனை..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா முன்னணி நடிகர்களோடு நடித்து குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ரீமேக்கில் நடித்த போது நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு இவர்கள் இருவரும் திடீரென்று கடந்த 2021 ஆம் வருடம் பிரிந்து விட்டார்கள் .அதன் பிறகு சமந்தா மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
அதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார். அதன் பிறகு ஓய்வெடுத்துவிட்டு திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது தயாரிப்பாளராக களமிறங்கி விட்டார். சுபம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமந்தா பேட்டி ஒன்றில் சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, “நான் நடித்த முதல் இரண்டு படங்களை இப்போது நான் பார்த்தாலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்னு யோசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.