CINEMA
நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச்செல்லும் ஆண்கள்… சமந்தா செய்த காரியம்.. என்னனு நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா முன்னணி நடிகர்களோடு நடித்து குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ரீமேக்கில் நடித்த போது நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு இவர்கள் இருவரும் திடீரென்று கடந்த 2021 ஆம் வருடம் பிரிந்து விட்டார்கள் .அதன் பிறகு சமந்தா மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
அதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார். அதன் பிறகு ஓய்வெடுத்துவிட்டு திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது தயாரிப்பாளராக களமிறங்கி விட்டார். சுபம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சக்சஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில், ‘டைரி ஆஃப் எ சிஇஒ’ என்ற Youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் ஒரு பகுதியை பகிர்ந்துகொண்டது.
அதில், “ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டு செல்வது ஏன்..? உறவுகள் கைவிடுவதற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன?. “624% சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் தங்களது நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டு பிரிந்து செல்கிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்வாய்ப்பட்ட கணவனை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு சமந்தா லைக் செய்துள்ளார்.