CINEMA
பாலா விளம்பரத்திற்காக தான் உதவி செய்யுறாரா..? பிரபல நடிகர் அமுதவாணன் ஓபன் டாக்..!!

மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் இன்றைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்தான் kpy பாலா. தன்னுடைய வாழ்க்கை, தனக்கான சேமிப்பு என மக்கள் ஓடிக் கொண்டிருக்க தான் சம்பாதிக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருவது பெரிய விஷயம்தான். அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான kpy பாலா மற்றவர்களுக்கு உதவி செய்து வருவதை சிலர் விளம்பரத்திற்காக தான் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அமுதவாணன் கூறுகையில், “பாலா இப்போது மட்டுமல்ல எப்போதும் என்னோடுதான் இருக்கிறார். மற்றவர்கள் செய்ய தயங்கும் போது ஒருவன் உதவி செய்வதை கிண்டல் செய்வது சரி கிடையாது. அவன் செய்யும் உதவிகளை விளம்பரத்திற்காக செய்கிறான் என்று ஏன் சொல்ல வேண்டும்? அரசியல்வாதி முதல்வர் அல்லது எம்.எல்.ஏக்கள் விளம்பரத்திற்காக கூட தன்னுடைய பணத்தை கொடுத்து உதவினால் என்ன அதுவும் காசு தானே” என்று கூறியிருக்கிறார்.