CINEMA
வெண்ணிலாவிற்கும், விஜய்க்கும் திருமணமா..? பரபரப்பை கிளப்பிய மகாநதி சீரியல்… குழப்பத்தில் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடர்களில் ஒன்றாக மகாநதி சீரியல் உள்ளது. பாரதிகண்ணம்மா தொடரை தொடர்ந்து குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் மகாநதி. அப்பாவை இழந்த நான்கு அக்கா தங்கைகளுடைய வாழ்க்கை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது விஜய் வெண்ணிலாவை அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வரை நான் அம்மா வீட்டிலேயே இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் காவேரி.
இந்த வார கதைகளத்தில் விஜய், காவேரி வீட்டிற்கு வந்துவிடுவார் என்ற சந்தோஷத்தில் இருக்க வெண்ணிலா அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது விஜய் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று வெண்ணிலா கூற அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் மகாநதி படபிடிப்பு தளத்திலிருந்து வெண்ணிலா புடவை கட்டி கோவிலில் இருக்க அவருடைய மாமா ராகினி மற்றும் அப்பா இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களின் புகைப்படத்திற்கு பின்னால் ஒரு ஐயரும், சில பெண்களும் இருப்பார்கள். இதை பார்க்கும்போது வெண்ணிலாவிற்கும் விஜய்க்கும் திருமணமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்