CINEMA
“5 குழந்தைகள் பெத்துக்க ஆசை ” ஆனா அதனால நடக்கல.. நடிகை ரம்பாவின் நிறைவேறாத ஆசை..!

தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குனரும் டான்ஸ் மாஸ்டருமான கலா கனடாவில் உள்ள தன்னுடைய தோழி ரம்பா வீட்டிற்கு சென்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் ரம்பா. வசிகரிக்கும் முகத்தாலும், அவருடைய தொடையழகினாலும், தத்ரூவமான நடிப்பாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். உழவன் என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
இதனை தொடர்ந்து 2010 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இலங்கை தமிழர் தொழிலதிபருமான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் .திருமணத்திற்கு பிறகு 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் மூன்று குழந்தைகள் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதால் மருத்துவர் அறிவுரைப்படி மூன்று குழந்தைகள் போதும் என நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.