ஒத்த ரூபாய்க்கு ஆதாரம் இருக்கா மாப்பிள்ள..? இதெல்லாம் சுத்த பொய்… ஆர்த்தி தாயார் வெளியிட்ட அறிக்கை..!! - cinefeeds
Connect with us

CINEMA

ஒத்த ரூபாய்க்கு ஆதாரம் இருக்கா மாப்பிள்ள..? இதெல்லாம் சுத்த பொய்… ஆர்த்தி தாயார் வெளியிட்ட அறிக்கை..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிமோகன். சமீபத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவிலியிருந்து ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது ஜூனி, கராத்தே பாபு ,பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் தன்னுடைய விவகாரத்தை அறிவித்தார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி இதற்கு உடன்படவில்லை. ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது . இதற்கிடையில் பிரபல பாடகி கெனிஷா என்பவரோடு ரவி மோகன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறினார் ரவி மோகன். ஆனால் சமீபத்தில்  ஐசரி கணேசன் மகள் திருமணத்திற்கு தன்னுடைய தோழி கெனிஷா பிரான்சிஸ்  உடன் ரவிமோகன் கலந்து கொண்டுள்ளார்.  இருவரும் ஒன்றாக வந்த வீடியோ மற்றும் சேர்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை தற்போது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஆர்த்தியின் தாயார் சுஜாதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், திரு ஜெயம் ரவி அவர்கள் இந்தப் படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.  ஒத்த ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sujatha Vijaykumar (@sujataavijaykumar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in