CINEMA
நாங்கள் ஏன் பிரிந்தோம்…? நீண்ட இடைவெளிக்கு பின் விவாகரத்து குறித்து பேசிய பாடகர் விஜய் யேசுதாஸ்…!

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் ஒரே மகன் தான் பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் தமிழில் யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர், எம் எம் கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ், டி இமான், உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடிஇருக்கிறார்.இதற்கிடையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்களின் விவாகரத்து குறித்து கேட்ட போது இருவரும் அதற்கான காரணத்தை கூறவில்லை. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார் விஜய் யேசுதாஸ். பேட்டி ஒன்றில் பேசிய அவர், நாங்கள் இருவரும் பரஸ்பர புரிதலுக்கு பின்னரே விவாகரத்து செய்தோம். எனது வாழ்க்கையில் இது ஒரு மோசமான நாள். என்னுடைய மகளுக்கு 15 வயது ஆகிறது. அதனால் அவாளுக்கு ஓரளவு என்ன நடக்கிறது என்று புரியும். ஒரு நபர் தான் செய்த செயலுக்கு பொறுப்பேற்காவிட்டால், அனைத்தும் பயனற்றதாகிவிடும்