CINEMA
அன்று அஜித் அதை செய்யாவிட்டால் இன்று எனக்கு இந்த வாழ்க்கை இல்லை… நடிகர் ராகவா லாரன்ஸ் உருக்கம்..!!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவில் ராகவா லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த அவரை நடனப்பள்ளியில் சேர்த்து விட்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குருப் டான்சராக பணியாற்றிய இவர் சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படம் மூலமாக இவருக்கு நடன இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் பல திரைப்படங்களில் நடந்த இயக்குனராக மாஸ் காட்டியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முனி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காஞ்சனா சீரியஸை தொடர்ந்து இயக்கி வருகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜிகர்தண்டா 2 இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய ராகவா லாரன்ஸ் நடிகர் அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது சரண் சாரிடம் சென்று ஒரு கதையும் சொன்னேன்.
அதைக் கேட்டுவிட்டு அஜித் சூப்பர் கதை உங்களுடைய கேரக்டரை என்னுடைய கதாபாத்திரத்தில் விட இன்னும் அதிகம் எழுதுங்கள் என்று சொன்னார். பிறகு நான் புதிய காரை வாங்கினேன் என்பதை தெரிந்து கொண்டு காரில் உட்கார்ந்து ஸ்டார் செய்து கொடுத்தார். அமர்க்களம் படத்தில் லாரன்ஸ் வேண்டாம் நானே நடனமாடி விடுகிறேன் என்று கூறியிருந்தால் எனக்கு இந்த வாழ்க்கை இல்லை என்று கூறியிருக்கிறார்.