CINEMA
“இனிமேல் இப்படி நடக்கவே கூடாது” பகல்ஹாம் தாக்குதல் குறித்து நடிகர் அஜித் கண்டனம்..!!

காஷ்மீரில் பக்லஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவில் அதிகமான பதற்றம் நீட்டித்து வருகிறது.
இந்த நிலையில் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இனி இதுபோன்று நடக்கக்கூடாது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். அரசாங்கம் தங்களால் முடிந்ததைச் செய்கிறது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அனுதாபம் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் . எல்லையில் உள்ள நம்முடைய ராணுவ வீரர்களால் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.