CINEMA
எனக்கு குழந்தை பிறக்காதுன்னு டாக்டர் சொன்னாங்க ஆனா… நம்மளையும் மீறி ஒரு சக்தி… நடிகை ரோஜா ஓபன் டாக்..!!

90 களில் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. தெலுங்கு படத்தின் மூலமாக அறிமுகமான இவர் ஆர்கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். பிறகு ரஜினிகாந்த், மம்மூட்டி, அர்ஜுன், பிரபு என பல முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். இவர் ஆர்கே செல்வமணியை காதலித்து 2001 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆர்கே செல்வமணியும், ரோஜாவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்கள். அதில், நானும் என்னுடைய கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெற்று எடுக்க வேண்டும் என்ற முடிவு செய்தோம். அந்த குழந்தைகளை உலக நாடுகள் போற்றும் விதமாக வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்போது எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொன்னதால் நானும் உடைந்து விட்டேன். பிறகு கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை பரிசாக கொடுத்தார். நம்மளை மீறி ஒரு சக்தி இருப்பதை அப்போது உணர்ந்தோம்” என்று கூறி இருக்கிறார்.