CINEMA
நடிகர் துருவ் விக்ரமை செருப்பால் அடித்த நடிகை அனுபமா..? காதல் முறிவால் வாக்குவாதம்… நடந்தது என்ன..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!
சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் அனுபமா செருப்பால் அடித்ததாக இணையத்திலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. ‘பைசன்’ திரைப்படப் படப்பிடிப்பின் போது இவர்களிடையே மலர்ந்த காதல் முறிந்ததாகக் கூறப்படும் நிலையில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருவ் விக்ரமை ‘அன்ஃபாேலோ’ செய்து, அமைதி மற்றும் சுதந்திரம் குறித்த சில மறைமுகப் பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாகவோ அல்லது காதல் முறிவு குறித்த செய்திகள் குறித்தோ நடிகர் துருவ் விக்ரமோ அல்லது நடிகை அனுபமா பரமேஸ்வரனோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது பரவி வரும் இந்தத் தகவல்கள் முற்றிலும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.
