CINEMA
“ஆண்களுக்கு ஒரு நியாயம்… பெண்களுக்கு ஒரு நியாயமா..? பகவத் கீதையில தாலி அணியணும்னு சொல்லிருக்கா?” சமூகத்தின் இரட்டை நிலையைத் தோலுரித்து நடிகை நமீதா அதிரடி கேள்வி..!!
பகவத் கீதையில் திருமணமான பெண்கள் தாலி அணிய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதா என்ற கேள்வியை நடிகை நமீதா எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், தாலி கட்டுவது மற்றும் அணிவது தொடர்பான விதிமுறைகள் ஏதேனும் வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ கூறப்பட்டுள்ளதா என்றால் நிச்சயம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சமூகம்தான் பெண்களுக்காகப் பல கட்டுப்பாடுகளை உருவாக்கி அவர்கள் மீது திணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்களுக்கு மட்டுமே அனைத்து விதிகளும் வகுக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்களுக்கு ஏன் இதுபோன்ற எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பி சாடியுள்ளார்.
