CINEMA
“காயம் சரியாக சிறுநீரை குடித்தேன்” அதிர்ச்சியை ஏற்படுத்திய சூரரைப்போற்று நடிகரின் பேச்சு..!!

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்தவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல். இவர் தமிழ், பாலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முழங்காலில் ஏற்பட்ட காயத்தை ஆற்ற சிறுநீரை குடித்ததாக கூறியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது அவர் கூறியதாவது, “ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய என்ற “கடக்” படத்தின் படப்பிடிப்பின்பொழுது எனது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
அதனால் என்னுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்தேன். அப்போது தான் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்தபோது சிறுநீரை குடிக்க சொன்னார். அவரின் பேச்சை கேட்டு நானும் என்னுடைய சிறுநீரை குடித்தேன். முழங்கால் காயம் சீக்கிரமே சரியானது” என்று பேசியுள்ளார். தற்போது இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.