LATEST NEWS
19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகர்…இந்த தொழில் செய்கிறாரா? சியான் விக்ரமால் இந்த நிலைக்கு வந்தேன்!
தமிழில் நல்ல குணச்சித்திர நடிகராக நடித்தவர் ராஜா. அந்தவகையில் 80, 90 களில் கொடிகட்டி பறந்த நடிகர் தான் டக்குபட்டி ராஜா. படவாய்ப்புகள் என்பது சினிமா பிரபலங்களின் வாழ்க்கைக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்தவகையில் படங்களில் நடித்து அதை பயன்படுத்தி நடித்து நல்ல வரவேற்பை பெற்றாலே சினிமாவில் நல்ல ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்லும்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிப்படங்களில் நடித்து பிரபலமானாவர் ராஜா. இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தி வளர்த்த பிரபலங்களில் இவரும் ஒருவர். கடலோரக் கவிதைகள் என்ற படத்தின் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் புகழ் பெற்று அடுத்தடுத்த படங்களில் பிஸியான நடிகராக திகழ்ந்தார். கருத்தம்மா, மாப்பிள்ளை, ச தி லீ லாவதி, கோலங்கள் என முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வந்தார். இதையடுத்து இளம் நடிகர்களின் வருகையால் அவர் பக்கம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சென்றதல் படவாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகினார்.
சினிமாவைவிட்டு விலகிய நடிகர் ராஜா இதன்பின் மார்பிள் தொழிலை ஆரம்பித்து வெற்றியை ஈட்டியுள்ளார். தற்போது 19 வருடங்களுக்கு பின் தெலுங்கு படங்களில் நடித்து சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரமின் தோழனாக இருக்கும் ராஜா அவரின் விருப்பதை நிறைவேற்ற தமிழ் சினிமாவில் மீண்டும் விக்ரமின் மகன் துருவ் விகரம் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளேன் என்று பேட்டிகளில் கூறி வருகிறார் ராஜா.
