LATEST NEWS
நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யாவின் கணவர் இவர் தானா?…. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்…!!!
ஆயுத எழுத்து சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சின்னத்திரை நடிகை சரண்யா.
அந்த சீரியலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி சரண்யா பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலிலும் ஹீரோயினியாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து டிவிகே சென்ற பிறகு மீண்டும் திரும்பி விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் நடித்தார்.
செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்த சரண்யாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதனை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரையில் படிப்படியாக முன்னேறினார்.
அதே சமயம் தன்னுடைய நடிப்புத் திறமையால் ஏராளமான ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
இவர் கல்லூரி படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரிடம் மனதை பறிகொடுத்து காதலித்து வந்த நிலையில் இந்த வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இவரின் கணவர் லண்டனில் வசித்தாலும் சென்னையில் குடியேறிய சரண்யா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகின்றார்.
இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் பழைய பாடல்கள் மீது தீராத காதல் கொண்ட சரண்யா நன்றாக பாடவும் செய்வார்.
இந்நிலையில் சரண்யா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட சில அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
