LATEST NEWS
குடும்பத்தோடு திருத்தணி கோவிலில்…. அப்பா – அம்மாவின் 50 ஆவது திருமண நாளை கொண்டாடிய ஜெயம் ரவி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.
தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் . இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பூமி. விவசாய பிரச்சனையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து அசத்து இருந்தார்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் பெற்றோர் எடிட்டர் மோகன் மற்றும் வரலட்சுமி தம்பதி நேற்று தங்களின் ஐம்பதாவது வருட திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அதனால் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களை ஜெயம் ரவி இணையத்தில் பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
