LATEST NEWS
“எங்களது வாழ்வில் மறக்க முடியாத நாள்”…. புகைப்படத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரியா அட்லீ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் புகைப்படத்துடன் அறிவித்தார். தற்போது சீமந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்று பிரியா பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
