LATEST NEWS
கடற்கரை ஓரம் சேலையில் சேலையில் நனைந்தபடி… புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை கண்மணி…!!
தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கண்மணி மனோகரன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகிய பிறகு ஜீ தமிழில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஒரு தைரியமான குடும்ப பெண்ணாக இவர் நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். தற்போது அவர் கடற்கரை ஓரம் சேலையில் வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
