LATEST NEWS
பட்டுப் புடவையில் மணப்பெண் போல ஜொலிக்கும் ராக்ஷி கண்ணா… சொக்க வைக்கும் பேரழகு..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராக்ஷி கன்னா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட தொழில்களில் பிரதானமாக வேலை செய்பவர்.
இவர் முதன் முதலில் இந்திய திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
பின்னர் பெங்கால் டைகர், சுப்ரீம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார். பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
அது மட்டுமல்லாமல் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பட்டுப் புடையில் மணப்பெண் போல ஜொலிக்கும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
