CINEMA
“என் பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா…லண்டன் பெண் சங்கீதாவிடம் எஸ்.ஏ.சி கேட்ட அந்த ஒரு கேள்வி…அன்று ஆசையாகப் பார்த்த மருமகள்.. இன்று நீதிமன்றத்தில்! விஜய்யின் தாய் ஷோபா பேசிய பழைய வீடியோ இப்போது வைரலாவது ஏன்…!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுத் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் சி. ஜோசப் விஜய், அடுத்த மாதம் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மிக முக்கியமான சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ளவிருக்கிறார். விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் கடந்த சில வருடங்களாகவே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தனித்தனியாக வாழ்ந்து வந்த சூழலில், சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விஜய்க்கும் முன்னணி நடிகை ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாகச் சங்கீதா குற்றம் சாட்டியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த ஏஜிஎஸ் வீட்டுத் திருமணத்திற்கு விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்ததும், விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் முன் வரிசையில் த்ரிஷாவும் அவரது தாயாரும் அமர்ந்து எமோஷனலாகப் பார்த்துக் கொண்டிருந்ததும் இந்த விவாகரத்து சர்ச்சைகளுக்கு இடையே மேலும் விவாதப் பொருளாக மாறின.
நீண்ட காலத் தம்பதியரான விஜய் – சங்கீதாவின் இந்த விவாகரத்து மனு அடுத்த மாதம் நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வரவிருக்கிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் இந்த விசாரணையை எதிர்கொள்ளவிருப்பதால், அன்றைய தினமே இருவருக்கும் சட்டப்பூர்வமான விவாகரத்து கிடைத்துவிடும் என்று சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் கணித்து வருகின்றன. இருவரது பிரிவும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் தனது முன்னாள் மருமகள் சங்கீதா குறித்துப் பெருமையாகப் பேசிய பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் தங்களது குடும்பத்திற்குள் சங்கீதா மருமகளாக நுழைந்த ஆரம்பகால நினைவுகளை ஷோபா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “சங்கீதா லண்டனிலிருந்து விஜய்யைப் பார்ப்பதற்காக முதன்முதலில் சென்னைக்கு வந்தபோது, அவரை விஜய்க்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்ற எந்தவொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. ஆனால், அவர் இரண்டாவது முறை வந்தபோது அவரிடம் எனது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘எங்கள் மகன் விஜய்யைத் திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். திடீரெனக் கேட்டதால் சங்கீதாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை; ஆனால் அவர்தான் எங்கள் வீட்டு மருமகளாக வர வேண்டும் என நாங்கள் ரொம்பவே விரும்பினோம். இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது, அவரும் ‘உங்கள் இஷ்டம்’ என்று சம்மதம் தெரிவித்துவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார். அன்று பார்த்துப் பார்த்து ஆசையாகத் தங்கள் வீட்டு மருமகளாக்கிய சங்கீதா, இன்று விவாகரத்து பெற்றுப் பிரியும் நிலைக்கு வந்துள்ளதை நினைத்து ரசிகர்கள் இந்த வீடியோவின் கீழ் கவலை தெரிவித்து வருகின்றனர்.
