CINEMA
வயது வித்தியாசம் கூட இல்லையா…பூங்காவில் கேட்ட அலறல் சத்தம்…சென்னையை உலுக்கிய கூட்டுப் பாலியல் வன்கொடுமை…வேளச்சேரி பூங்காவில் நடந்த அநாகரிகம்! சின்மயி வெளியிட்ட ஆவேசப் பதிவு…!
பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சிக்குச் சென்ற 60 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு அதிகாலை வேளையில் அந்த மூதாட்டி நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட போதை கும்பல், யாரும் எதிர்பாராத விதமாக மூதாட்டியைச் சூழ்ந்து கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், பூங்காவைச் சுற்றியுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஐந்து பேர் கொண்ட வடமாநிலக் கும்பல் இதில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, தீவிரத் தேடுதல் வேட்டையின் மூலம் இரண்டு பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்; தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். கடந்த வாரம் கோயம்புத்தூர் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சோகம் மறைவதற்குள், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பாதுகாப்பு மிகுந்த பூங்காவிலேயே மூதாட்டி ஒருவருக்கு இந்த அவலம் நேர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான இந்தத் தொடர் அத்துமீறல்கள் குறித்துப் பிரபல பின்னணி பாடகியும், சமூக ஆர்வலருமான சின்மயி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கடும் ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.”சென்னையில், அதுவும் வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி ஒருவரை ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் படித்தபோது அதிர்ச்சியடைந்தேன். நாம் மனித நேயத்தில் எவ்வளவு தூரம் கீழிறங்கிவிட்டோம்! இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவர் 15 வயது சிறுவன் என்றும், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.”
சமூகத்தில் வயது வித்தியாசமின்றிப் பெண்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் அவல நிலையைச் சின்மயி வெளிப்படுத்தியதோடு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் சோஷியல் மீடியாக்களில் தற்போதைய பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
