CINEMA
விஜய் முன்னிலையில் ‘அவன் பிட்டு படம் எடுத்திருக்கான்’ எனக் கத்திய நண்பர்…அஜித் ரசிகராக இருந்தாலும் விஜயுடன் இருக்கும் ‘அந்த’ ரகசிய நட்பு…பிரபு, விக்ரம் பிரபுடன் திடீரென முதல்வர் அலுவலகம் வந்த ஆதிக்… கோலிவுட்டில் பரவும் புதிய ஹாட் டாபிக்…!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் சி. ஜோசப் விஜய் அவர்களை, திரை பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு, சிபி சத்யராஜ், சாந்தனு, அர்ஜுன் போன்ற பல நட்சத்திரங்கள் ஏற்கனவே முதல்வரைச் சந்தித்துள்ள நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் பிரபுவின் மருமகனும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், அவருக்கும் முதல்வர் விஜய்க்கும் இடையே நீண்ட நாட்களாகவே ஒரு சுவாரசியமான நட்புறவு இருந்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற சமயத்தில், விஜய் கலந்துகொண்ட ஒரு பார்ட்டியில் ஆதிக்கும் பங்கேற்றுள்ளார். அப்போது ஆதிக்கின் நண்பர் ஒருவர் விஜயிடம் வேடிக்கையாக, “அண்ணா இவன் பிட்டு படம் எடுத்திருக்கான்” என்று கத்த, அதற்கு விஜய் சற்றும் யோசிக்காமல், “ஹிட்டு படம் எடுத்துட்டான்ல.. அது போதும்” என்று கூறி ஆதிக்கிற்கு ஆதரவாகப் பேசி அவரை நெகிழ வைத்துள்ளார்.
அஜித்தின் தீவிர ரசிகராக இருந்தாலும், திறமையைப் பாராட்டி தனக்கு ஆதரவு கொடுத்த விஜய் மீது ஆதிக் ரவிச்சந்திரனுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அந்த பழைய நட்பின் அடிப்படையிலும், பிரபு குடும்பத்தின் மருமகன் என்ற முறையிலும் இந்தச் சந்திப்பு இன்று மிக உன்னதமான முறையில் நிகழ்ந்துள்ளது. அரசியல் பணிகளுக்கு மத்தியிலும், தனது ஓய்வு நேரத்தில் பழைய நட்புக்கும் சினிமா உலகினருக்கும் முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் விஜய் தங்களை வரவேற்றுப் பேசியதாக பிரபுவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
