CINEMA
“அடச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..?!” மனைவியைக் கொன்றவன்… இப்போது 85 வயது தாயைக்கு நேர்ந்த கொடூரம்… துருக்கியை உலுக்கிய அரக்கன்… வைரலாகும் திடுக்கிடும் வீடியோ..!!
சுவிட்சர்லாந்தில் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் துருக்கிக்குத் திரும்பிய இப்ராஹிம் யாப்ராக் என்பவர், மீண்டும் ஒரு கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். துருக்கிக்கு வந்த சில நாட்களிலேயே, அவர் தனது 85 வயதான வயதான தாயைக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்தப் மூதாட்டியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
İsviçre’de eşini boğarak öldüren ve 15 yıl hapis yattıktan sonra 10 gün önce Türkiye’ye dönen İbrahim Yaprak, 85 yaşındaki annesini sopayla öldüresiye dövdü.
Gözaltına alınan İbrahim Yaprak, tutuklanarak cezaevine gönderildi.
Annesinin durumu ağır. pic.twitter.com/usCIih3wtf— ibrahim Haskoloğlu (@haskologlu) August 10, 2026
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தப்பியோடிய இப்ராஹிம் யாப்ராக்கைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மீண்டும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மனைவியைக் கொன்ற கொடூரன் பெற்ற தாயையும் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
