CINEMA
விஜய் இல்லாத கோலிவுட்…!பைலட் ஆக ஆசைப்பட்ட அஜித்…!சன் பிக்சர்ஸ் உடன் கைகோர்க்கும் ஏகே…!அரசியலுக்கு நோ சொல்லிவிட்டு அஜித் எடுத்த விஸ்வரூப முடிவு! அதிரடி பின்னணி…!
தமிழ் திரையுலகில் இருந்து எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். ஆரம்பத்தில் இவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அசால்ட்டாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து மெர்சல் காட்டியுள்ளது. சி.எம் ஆக விஜய் பதவியேற்றது திரைத்துறையினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் மாற்று கட்சி எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையும் பரபரப்பு என தற்போதைய ஆட்சி கடும் விமர்சன வளையத்திற்குள் சிக்கியுள்ளது.
விஜய் முழுமையாக அரசியலில் இறங்கி சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டதால், கோலிவுட்டில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி “விஜய் சென்றதால் சினிமாவில் எந்த வெற்றிடமும் இல்லை” என்று ஓபனாகப் பேசியிருந்தார். இருப்பினும், விஜய் இல்லாத அந்த இடத்தை அஜித்தான் நிரப்ப வேண்டும் என்பது ஏகே ரசிகர்களின் தீராத ஆசையாக இருக்கிறது. ஆனால், அஜித்தோ தனது அடுத்தடுத்த படங்களான ‘குட் பேட் அக்லி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, கார் ரேஸிங்கிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடனும் பல படங்களில் இணைந்து நடித்த கோலிவுட்டின் சீனியர் நகைச்சுவை நடிகர் வையாபுரி, அஜித் குறித்துப் பகிர்ந்துள்ள சில சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. “தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதில் அஜித் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருக்கிறார்” என்று கூறிய வையாபுரி, ‘ராஜா’ படப்பிடிப்பின் போது அஜித் ஒரு குட்டி விமானத்தை வைத்துக்கொண்டு ஆளே இல்லாத காட்டுக்குள் போய் அதை ஆபரேட் செய்து பழகிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ஒரு நாளாவது பைலட்டாகிவிட வேண்டும் என்ற அஜித்தின் தீராத ஆசையையும், கார் ரேஸில் அவருக்கிருக்கும் வெறியையும் குறிப்பிட்ட வையாபுரி, ரசிகர்கள் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்த அஜித், எதைச் செய்தாலும் அதில் நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்பதே தன் ஆசை என்றும் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
