LATEST NEWS
சத்தமில்லாமல் நடந்துமுடிந்த பிரபல சீரியல் நடிகையின் நிச்சயதார்த்தம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?
“காற்றின் மொழி” சீரியல் நடிகை வைஷ்ணவி அவர்கள் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்கள்ல் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியல் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்ற முக்கிய சீரியல்களில் ஒன்று,
இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் பிரியங்கா கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். காற்றின் மொழி சீரியலில் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிற நடிகை வைஷ்ணவி ராஜசேகரனின் நடிப்பு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை வைஷ்ணவி ராஜசேகரன் சாய் விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், வைஷ்ணவிக்கும் காதலர் சாய் விக்னேஷுக்கும் திருமண நி ச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
