LATEST NEWS
‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா ஏற்கெனவே விவாகரத்து பெற்றவரா?…. வெளியான ஷாக்கிங் தகவல்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ரூ. 200 முதல் ரூ. 240 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த இப்படம் இதுவரை ரூ. 450 கோடி மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் நடிப்புக்கும் தற்போது இணையத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
அவரை பற்றி அதிகம் பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. மிர்னா மேனன் இதற்கு முன்பு தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் படங்களில் நடித்து இருக்கிறார். அப்போது நடிகர் அபி சரவணன் என்பவருடன் காதலில் விழுந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அவர்களது விவகாரத்து வழக்கு சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்றே கூறலாம்.
