LATEST NEWS
“என்ன ஒரு கெத்து… என்ன ஒரு நிம்மதி..!” மாட்டின் வயிற்றில்.. குறட்டை விட்டு தூங்கிய நபரின் வைரல் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் “இந்தியா ஆரம்பக்கட்ட நபர்களுக்கானது அல்ல” என்ற வாசகத்துடன் பல விசித்திரமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம். அந்த வகையில், பரபரப்பான சாலை ஒன்றின் நடுவே நபர் ஒருவர் மாட்டின் வயிற்றுப் பகுதியில் படுத்து நிம்மதியாகத் தூங்கும் விசித்திரமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையில் வாகனங்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருந்த போதிலும், அந்த நபரோ அல்லது அந்த மாட்டோ அதைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் மிகவும் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த அசாதாரணமான காட்சியை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். ‘TARUNspeakss’ என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெளியான சில நாட்களிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற துல்லியமான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த விசித்திரமான காட்சியைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தாலும், வேறு சிலர் பரபரப்பான பொதுச்சாலையில் இப்படி ஆபத்தான முறையில் தூங்குவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சிலர், “இந்தியாவில் மட்டுமே இப்படிப்பட்ட விசித்திரமான அதிசயங்களைச் சாத்தியமாகப் பார்க்க முடியும்” என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
