LATEST NEWS
செம ஜாலியா இருக்கு..! இனி போன் தேவையில்லை… மொத்த சேற்றையும் விளையாட்டு மைதானமாக மாற்றிய சுட்டிப் பெண்..வைரல் வீடியோ…!!
சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், குழந்தைகளின் கள்ளமில்லா குறும்புகள் நிறைந்த வீடியோக்களுக்கு எப்போதுமே இணையத்தில் தனி மவுசு தான். அந்த வகையில் தற்போது ஒரு சுட்டிக்குழந்தையின் அட்டகாசமான வீடியோ ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. பொதுவாகவே மழைக்காலங்களில் சேற்றில் விளையாட வேண்டாம் என்று பெற்றோர்கள் குழந்தைகளைத் திட்டுவது வழக்கம். ஆனால், இங்கு ஒரு சிறுமி தன் அம்மாவின் பேச்சைக் கேட்காமல், அங்கு தேங்கியிருந்த ஒட்டுமொத்த சேற்றுக் குட்டையையும் தனது விளையாட்டு மைதானமாகவே மாற்றிவிட்டாள். பார்ப்பவர்களையே புன்னகைக்க வைக்கும் இந்த வீடியோ தான் தற்போது எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
வைரலாகும் அந்த வீடியோவில், பள்ளி பேருந்து ஒன்றிற்கு அருகே மழைநீர் தேங்கி ஒரு சேற்றுக் குட்டை உருவாகியிருப்பதைக் காண முடிகிறது. மற்ற குழந்தைகள் பேருந்தின் அருகே அமைதியாக நின்று கொண்டிருக்க, இந்த சுட்டிச் சிறுமி மட்டும் தனியாக அந்த சேற்று நீரில் இறங்கி உற்சாகமாக குதித்து விளையாடுகிறாள். அவளது ஆடைகள் முழுவதும் சேறு படிந்திருந்தாலும், அவளது முகத்தில் இருக்கும் அந்த மகிழ்ச்சியான சிரிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. சிறிது நேரம் கழித்து பேருந்தில் இருந்து இறங்கிய மற்றொரு குழந்தை, அவளை அந்த சேற்றில் இருந்து வெளியே இழுக்க முயற்சிக்கிறது. ஆனால் அந்த சிறுமியோ அதையெல்லாம் சட்டை செய்யாமல் தனது சொந்த உலகத்தில் மிகவும் குதூகலமாகத் துள்ளி குதித்து கொண்டிருக்கிறாள்.
இந்த கியூட்டான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது குழந்தைப் பருவ நினைவுகளுக்குச் சென்றுவிட்டனர். “இந்த வீடியோவை மட்டும் அந்த குழந்தையின் அம்மா பார்த்தால் என்ன ஆகும்?” என்று சிலர் நகைச்சுவையாகவும், “கறைகள் நல்லது, இது தான் உண்மையான இம்யூனிட்டி பூஸ்டர்” என்று வேறு சிலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் மற்றும் கேட்ஜெட்களிலேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், இப்படி எந்த ஒரு கவலையும் இல்லாமல் சுதந்திரமாகச் சேற்றில் விளையாடும் இந்த சிறுமியின் வீடியோ பலரது மனதையும் கொள்ளையடித்துள்ளது. ‘பெப்பா பிக்’ கார்ட்டூனைப் பார்த்து இந்த சிறுமி ஈர்க்கப்பட்டுவிட்டாள் போலும் எனப் பலரும் ரசித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்
