LATEST NEWS
பழம்பெரும் நடிகை பத்மினியின் மகன், கணவரை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படும் பிரபலங்களில் ஒருவர்தான் நடிகை பத்மினி. இவர் நடித்த பல படங்களிலும் இவரின் நடனம் ரசிகர்களை கட்டிப்போட்டது. பரதநாட்டிய கலைஞரான இவர் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே இன்றும் உள்ளது.
இப்படி பல புகழுக்குரிய இவர் 1961 ஆம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவை விட்டு விலகினார். குடும்பத்திற்காக வெளிநாட்டில் செட்டிலான பத்மினிக்கு பிரேம் ஆனந்த் என்ற மகன் உள்ளார். இப்போது அவர் வெளிநாட்டில் பத்மினி பெயரில் உள்ள நடனப் பள்ளியை கவனித்து வருகின்றார். இந்நிலையில் நடிகை பத்மினியின் கணவர் மற்றும் மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
