LATEST NEWS
ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து…. இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்கள்…. சிறப்பு தொகுப்பு…!!
ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை அடுத்த பாஹ நகர் பஜார் நிலையம் அருகே பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோர விபத்து ஏற்பட்டது. .
இந்த ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கியுள்ளது. அங்கு இருக்கும் உடல்களை அல்ல வந்து கொண்டிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகின்றது.
பீகார் மாநிலத்தில் ரயில் விபத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு 800 பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே 1956 ஆம் ஆண்டு அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் உயிரிழந்தனர்.
இந்த இரண்டு விபத்துகளுக்கும் இணையான விபத்து தற்போது ஒடிசாவில் ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் சுமார் 294 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் பலி எண்ணிக்கை 400- ஐ தாண்டலாம் எனவும் கூறப்படுகின்றது. 600 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முக்கியமாக ஒரு 20 நிமிட இடைவெளி இந்த விபத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹௌரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளவில்லை. இதில் முதலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தான் விபத்தில் சிக்கியுள்ளது. சுமார் 7 மணி அளவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் ரயிலை கொண்டு செல்ல கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்.
ரயில் கடந்த பிறகு சில நொடிகளில் அது சிவப்பாகி உள்ளது. சிவப்பாக விளக்கு மாறியதை கவனிக்காமல் கோரமண்டல் முன்னோக்கி சென்றுள்ளது. அதே பாதையில் இருந்த சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட நிலையில் இது 10 முதல் 12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வரர் அருகே தடம் புரண்டு எதிர் தண்டவாளத்தில் விழுந்தது.
இந்த நேரத்தில் 20 நிமிடம் கழித்து பெங்களூரில் இருந்து ஹௌரா செல்லும் மற்றொரு அறையில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்திலிருந்து தடம் புரண்ட ரயில்கள் மீது பெங்களூரு ரயில் மோதியதால் அந்த ரயிலும் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திரை பிரபலங்களின் சில பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
