LATEST NEWS
90ஸ் இல் மிகவும் பிரபல முன்னணி நடிகர் ஆனந்தின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா வைரலாகும் குடும்ப புகைப்படம்…
90ஸ் களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆனந்த். இவர் பிப்ரவரி 21தேதி 1968 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர் தந்தை வி எஸ் பாரதி தாய் ராஜலட்சுமி இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான வண்ணக் கனவுகள் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார் , பூந்தோட்ட காவல்காரன், அபூர்வ சகோதரர்கள், அதிசய மனிதன், அதிகாரி,
தலைவர்கள் ,அஞ்சலி ,வானத்தைப்போல, உனக்கு 20 எனக்கு 18 ,போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் மூலம் நடிகர் ஆனந்த் மக்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.
90s காலகட்டத்தில் இவருக்கு என்று ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான படம் ‘திருடா திருடா’ இப்படம் ரசிகர் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
அந்த படத்திற்கு பிறகு இவருடைய படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. பின்பு சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியது .
இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில்,வில்லன் கதாபத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சினிமாவில் இவருக்கு வாய்ப்பு குறைந்த நிலையில் சீரியல் தனது காலடித்தலத்தை பதித்து வருகிறார்.
இவர் சிகரம் என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றான ‘அன்பே வா’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் வருணி அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் பல மொழி தொடர்களின் நடித்து வருகிறார்.
இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாயும் ஒலி நீ யெனக்கு’ என்ற படத்தில் நடித்துள்ளார் .அதன் பிறகு இவர் நடித்த தமிழில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
நடிகர் ஆனந்த் பூர்ணிமா என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாரதி என்ற ஒரு மகனும் உள்ளார். இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது
