LATEST NEWS
பால் வாங்க கூட காசில்லாமல் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகர்..!! யோசிக்காமல் அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்..!! என்ன செஞ்சார் தெரியுமா?
சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும், தங்களது நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நெறய பேர் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரேணிகுண்டா படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன், இவர் நடிகர் அஜித்துடன் பில்லா 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் சினி உலகத்திற்கு அளித்திருந்த பேட்டியில் தான் இப்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், தனது குடும்பத்திற்கு உதவி தேவைப்படுவதாகவும் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். மேலும் தனது குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர்கள் அஜித் அல்லது ராகவா லாரன்ஸ் உதவ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். நடிகர் அஜித் இதை கண்டால் நிச்சயம் உதவுவார் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து தற்போது இந்த செய்தி தளபதி அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் நடிகர் விஜய் அவர்கள் உடனடியாக தீப்பெட்டி கணேசனுக்கு போன் செய்து,
நீங்க கவலைப்படாதீங்க, வெளில எங்கயும் போகாம வீட்டிலே இருந்து மனைவி பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கான பொருள் உங்களது வீடு தேடி வரும் என்று கூறியுள்ளார். மேலும். நடிகர் விஜய் அவர்கள் கணேசனுக்கு ஒரு பெரிய தொகையை ரொக்கமாக வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. நடிகர் அஜித்திடம் உதவி கேட்ட, கணேசனுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளது மக்களிடம் ரசிகர்களிடமும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
