தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சி…! மன உளைச்சலால் சென்னை பழவந்தாங்கல் திமுக வட்ட செயலாளர் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சி…! மன உளைச்சலால் சென்னை பழவந்தாங்கல் திமுக வட்ட செயலாளர் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

Published

on

சென்னை பழவந்தாங்கல் நேரு காலனி பகுதியைச் சேர்ந்த 56 வயது ஏசுதாஸ், திமுகவின் 164-வது வட்ட செயலாளராக நீண்ட காலம் மக்கள் செல்வாக்குடன் பணியாற்றியவர். இவரது மனைவி தேவி தற்போது அதே வார்டின் மாமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்ததால், அவர் கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான கட்சியின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து சக நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அதன்பின்னர் நள்ளிரவில் நீண்ட நேரமாகியும் அவரது அறைக் கதவு திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த பழவந்தாங்கல் காவல்துறையினர் ஏசுதாஸின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். தேர்தல் தோல்வி குறித்த விரக்தியிலும், அது தொடர்பாக அன்றிரவு குடும்பத்தினருடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தினாலும் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in