LATEST NEWS
“ஐயோ இது என்ன புது உயிரினம்..?!” ஜெல்லிமீன் இல்லையாம்… ஆனா தொட்டா ஆபத்தா..? பிரிட்டன் கடற்கரைகளை ஆக்கிரமித்த நீல நிற விசித்திர ஜீவன்கள்.. தீயாய் பரவும் பகீர் தகவல்கள்..!!
பிரிட்டனின் கும்ப்ரியா மற்றும் வேல்ஸ் கடற்கரைகளில், விசித்திரமான பிரகாசமான நீல நிற உயிரினங்கள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கி வருவது சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் பார்வையில் ஜெல்லிமீன்கள் போலத் தோன்றும் இவை, அறிவியல் ரீதியாக “வெலெல்லா வெலெல்லா” என்றும், பொதுவாக “காற்றடிக்கும் மாலுமிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. 2 அங்குல அளவே கொண்ட இந்த உயிரினங்கள் தனித்த ஒரு உயிரினம் அல்ல. பல சிறிய உயிரினங்கள் ஒன்று சேர்ந்து இயங்கும் அமைப்பாகும். உடலின் மேல் உள்ள ஒளிபுகும் பாய்மரம் போன்ற அமைப்பில் காற்று மோதும்போது, இவை சிறிய படகு போல நீரின் மேற்பரப்பில் மிதந்து செல்கின்றன.
I spotted lots of these unusual creatures on Borth Beach in Wales, these are By-the-wind Sailors or Velella velella & are a colony of individual animals & not true jellyfish.
There’s a video here which shows more & gives a sense of their scale https://t.co/uVd0EmY5t6 pic.twitter.com/BHH2DhMB4m— Andrew Brooks (@AndrewPBrooks) August 3, 2026
கடலில் ஏற்பட்ட புயல்கள் காரணமாக வீசிய பலத்த மேற்குக் காற்றும், பிரிட்டனில் நிலவும் அசாதாரணமான 35 டிகிரி செல்சியஸ் வெப்ப அலையுமே இவை பெருமளவில் கரை ஒதுங்குவதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. வெப்பமான வானிலை காரணமாக இவற்றின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், பலமான காற்று இவற்றைச் சுலபமாகக் கரையை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் இதுவே மிகப்பெரிய அளவில் இவை கரை ஒதுங்கிய நிகழ்வு என கடல்சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடற்கரையில் நீல நிற ரத்தினங்கள் போலச் சிதறிக்கிடக்கும் இந்தக் காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு வியந்து புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த அழகான உயிரினங்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறு கும்ப்ரியா வனவிலங்கு அறக்கட்டளை எச்சரித்துள்ளது. ஆபத்தான ‘போர்த்துகீசிய மேன் ஓ வார்’ அளவுக்கு விஷத்தன்மை கொண்டவை இல்லை என்றாலும், இவற்றைத் தொட்டுவிட்டு கண், உதடு அல்லது முகத்தில் கை வைத்தால் கடுமையான எரிச்சலும் அரிப்பும் ஏற்படும். கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் நாட்களிலும் இதுபோன்ற நீல நிற விருந்தினர்கள் பிரிட்டன் கடற்கரைகளில் அதிகமாகக் காணப்படலாம் என வானிலை ஆய்வு மையமும் கடல்சார் வல்லுநர்களும் கணித்துள்ளனர்
