LATEST NEWS
“எல்லாரும் உடனே வெளியே வாங்க.. சுறான்னு நினைச்சு பயந்தாங்க… ஆனா அப்புறம் நடந்த ட்விஸ்ட் இருக்கே…!” வீடியோவை பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்..!!
மார்ஃபெல்லா பகுதியில் உள்ள அன்கான் கடற்கரைக் கரையின் மிக அருகில் பிரம்மாண்டமான மீன் ஒன்று நீந்தி வந்த சம்பவம், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அலைச்சறுக்கு வீரர்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. சனிக்கிழமையன்று நடந்த இந்தச் சம்பவத்தின் போது, ஷார்க் மீன் போன்ற தோற்றத்தில் கரையை நோக்கி வந்த அந்த பெரிய மீனைப் பார்த்தவுடன், மக்கள் பாதுகாப்பிற்காக உடனடியாகக் கடலிலிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டனர்.
🐟 Susto en la playa Marbella por la aparición de un gran pez junto a la orilla. La aparición del pez, al parecer un atún, ha ocurrido en la playa del Ancón de la localidad marbellí este sábado.
📱 Más información en https://t.co/XrOoC7il3m #PlayaMarbella #Susto #Pez #Orilla pic.twitter.com/wMTNVDAfb5— 101tv.es Málaga (@101tvMalaga) August 8, 2026
இருப்பினும், பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் சுறா மீன் அல்ல என்றும், கடல் அலைகளில் வழியறியாமல் கரை ஒதுங்கிய மிகப்பெரிய டியூனா ரக மீன் என்பதும் தெரியவந்தது. வழக்கத்திற்கு மாறாக கரைக்கு மிக அருகில் வந்த அந்தப் பிரம்மாண்ட மீனின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாகக் கடற்கரையில் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் நிலவியது.
