CRIME
பட்டப்பகலில் கொடூரம்… தேங்காய் வெட்டும் கத்தியாலேயே நடந்த ரத்தவெறி ஆட்டம்.. 35 வயது நபருக்கு நேர்ந்த விபரீதம்.. நடுநடுங்க வைக்கும் வீடியோ..!!
ஹைதராபாத், செகந்தராபாத்தின் சிங்கரேணி காலனி பகுதியில் சாலையோரத்தில் தேங்காய் வியாபாரம் செய்து வந்த 35 வயதான அமீர் என்பவர், தேங்காய் வெட்டும் கத்தியால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இக்கொடூரச் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
నడిరోడ్డుపై యువకుడి దారుణ హత్య
సైదాబాద్ సింగరేణి కాలనీలో 35 ఏళ్ల హమేర్ను కొబ్బరికాయలు నరికే కత్తితో నడిరోడ్డుపై దారుణంగా హత్య చేశారు.
నిందితుడు పరారీలో ఉండగా, ప్రత్యేక బృందాలతో పోలీసులు గాలింపు చేపట్టారు. హత్యకు గల కారణాలపై అన్ని కోణాల్లో దర్యాప్తు కొనసాగుతోంది pic.twitter.com/p091AyS8Cu— greatandhra (@greatandhranews) August 4, 2026
இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பி ஓடிய மர்ம நபரைப் பிடிப்பதற்காகக் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். அத்துடன், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும், தனிப்பட்ட பகையா அல்லது தொழில் போட்டியா என்ற அனைத்துக் கோணங்களிலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
