CRIME
“நானும் பெரிய ரவுடிதான் …” 1½ அடி கத்தியுடன் பில்டப் கொடுத்த 19 வயது வாலிபர் .. போலீசார் செய்த தரமான சம்பவம்.. கிளைமாக்ஸ் வேற லெவல்..!!
புதுச்சேரியில் ‘நானும் ரவுடிதான்’ என்ற விஜய்சேதுபதி நடித்த திரைப்படப் பாணியில் பெரிய ரவுடியாக வேண்டும் என்ற ஆசையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய 19 வயது வாலிபரை ஓதியஞ்சாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கண்டாக்டர் தோட்டம், கருமாரியம்மன் கோவில் அருகே பார்த்தசாரதி என்ற அந்த வாலிபர், 1½ அடி நீள கத்தியை வைத்துக்கொண்டு அந்த வழியாகச் சென்ற பொதுமக்களுக்குப் பில்டப் கொடுத்து மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வருவதைக் கண்டதும், அவர் சினிமா கிளைமாக்ஸ் போல தப்பியோட முயன்றார். எனினும், போலீஸார் அவரைச் சுற்றி வளைத்துத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர்.
விசாரணையில், ஊரில் உள்ள அனைவரும் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்றும், பெரிய ரவுடியாக வலம் வர வேண்டும் என்பதற்காகவுமே தான் இவ்வாறு செய்ததாக அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரது கத்தியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவருக்குத் தங்களது பாணியில் தக்க பாடம் புகட்டி சிறையில் அடைத்தனர். தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அந்த ‘ஆசை ரவுடி’, பெரிய ரவுடியாக வேண்டும் என்று நினைத்துத் தேவையில்லாமல் தப்புச் செய்துவிட்டோமே எனச் சக கைதிகளிடம் புலம்பி வருவதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
