CRIME
கள்ளக்காதலன் தலையில் இரும்பு கம்பி அடித்து… ஆசிட் ஊற்றி கொடூர கொலை… ஆந்திராவை உலுக்கிய கள்ளக்காதலி – கள்ளத்தொடர்பால் நேர்ந்த பரிதாபம்…!!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் காரிவிடி மண்டலத்திற்குட்பட்ட கண்டிப்பேட்டா கிராமத்தில், தகாத உறவு காரணமாக அரங்கேறிய கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண், தன் உடன்பிறந்த கணவரின் உறவினருடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு இறுதியில் ரத்தக் களறியில் முடிந்துள்ளது.
கண்டிப்பேட்டா கிராமத்தைச் சேர்ந்த தனாளு ராமுலம்மா என்பவர் தன் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, அவரது கணவரின் சகோதரியின் மகனான (Nephew) தனாளு சீனு என்பவருடன் ராமுலம்மாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த சீனுவும், ராமுலம்மாவும் கடந்த சில காலமாக ஒரே வீட்டில் ‘லிவ்-இன்’ (Live-in) முறையில் குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் எல்லை மீறிச் செல்லவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ராமுலம்மா வீட்டில் இருந்த கனமான இரும்பு கம்பியை எடுத்து சீனுவின் தலையில் ஓங்கி பலமாக அடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி விழுந்த சீனுவின் மீது, கொடூர மனநிலையோடு ஆசிட்டையும் ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சீனு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீபூர்வல்லி ஆய்வாளர் சங்கர ராவ் மற்றும் காரிவிடி உதவி ஆய்வாளர் லோகேஷ்வர் ராவ் ஆகியோர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளி ராமுலம்மாவை கைது செய்து கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
