CRIME
“சிசிடிவியில் சிக்கிய கொடூரம்” வளர்ப்பு நாயுடன் தகாத உறவு.. அதிர்ச்சி வீடியோவை பார்த்து மனைவியை போலீசில் சிக்க வைத்த கணவர்..!
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்பவர், தங்கள் வீட்டில் வளர்க்கும் நாயுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் உண்டியல் பணத் திருட்டைப் பிடிக்கப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவரது கணவர் மனைவியின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை விசாரணையில் வீடியோவில் இருப்பது தான் தான் என்பதை ஒப்புக்கொண்ட நும்மர்டோர், பாலியல் நோக்கம் எதுவும் இல்லை என மறுத்துள்ளார். இருப்பினும் அவரது வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததால், சார்லட் கவுண்டி காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
