CRIME
கலியுகக் கொடுமை!.. மகளின் தாலியை அறுத்து 26 வயது மருமகனுக்காக 45 வயது மாமியார் செய்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உறவுகளின் புனிதத்தை முற்றிலுமாகச் சிதைக்கும் மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரியில் உள்ள கர்ப்ஜீத் நகரில் நடந்துள்ளது, இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதான மாமியார் ஒருவர், தனது 26 வயது மருமகனுடன் காதல் வயப்பட்டு, அவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ள விசித்திரமான செய்தி தான் தற்போது ஊர் மக்களின் முதன்மைப் பேச்சாக மாறியுள்ளது. 5 பிள்ளைகளுக்குத் தாயான அந்தப் பெண், தன் மகளின் வாழ்க்கையைப் பற்றிச் சற்றேனும் சிந்திக்காமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த விவகாரம் பிள்ளைகளுக்குத் தெரியவந்ததும், அவர்கள் வீட்டில் பெரும் ரகளையில் ஈடுபட்டு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இருவரும் ஒன்றாகத் தங்கி வாழத் தொடங்கிய விபரம் பரவியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தன் சொந்த மகளின் குடும்பத்தை வேரோடு அழித்துவிட்டு, அதே மருமகனுடன் தன் வாழ்க்கையைத் தொடங்கத் துணிந்த இந்தத் தாயின் செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
