CRIME
“அவர் இறந்தால்தான் நிம்மதி..!” மாமியார் வழுக்கி விழுந்ததைச் சாதகமாக்கி மருமகள் செய்த பகீர் காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
செங்கல்பட்டு அருகே மாமியார் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய மருமகள், அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்-இந்துஜா தம்பதியினருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், வெங்கடேசனின் தாய் பெருந்தேவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். திருமண நாள் முதலே மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று பெருந்தேவி கழிவறையில் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திய இந்துஜா, வன்மத்துடன் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், மாமியார் தவறி விழுந்து மூச்சுத்திணறலால் மயங்கிவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று நாடகமாடியுள்ளார்.
இருப்பினும், உடற்கூறாய்வு அறிக்கையில் பெருந்தேவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. செங்கல்பட்டு நகர காவல்துறையினரின் தீவிர விசாரணையில், “மாமியார் இறந்தால்தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதால் கொலை செய்தேன்” என இந்துஜா பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். “மாமியார் இறந்தால் நிம்மதி” என்ற தவறான எண்ணத்தால் எடுத்த இந்த ஒரு நொடி கொடூர முடிவு, அந்த குடும்பத்தின் நிம்மதியை முற்றிலுமாகப் பறித்துவிட்டது. பெற்ற தாயைப் பறிகொடுத்து, மனைவியையும் சிறைக்கு அனுப்பிவிட்டு நடுத்தெருவில் நிற்கும் கணவன் வெங்கடேசனின் நிலை அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
