சந்தேகத்தால வந்த வினை… மனைவி வேலைக்குச் சென்றதால் ஆத்திரம்… மாமியாரைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிய மருமகன்..! ராஜஸ்தானை உலுக்கிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

சந்தேகத்தால வந்த வினை… மனைவி வேலைக்குச் சென்றதால் ஆத்திரம்… மாமியாரைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிய மருமகன்..! ராஜஸ்தானை உலுக்கிய பகீர் சம்பவம்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா நகரத்தின் ஹவுசிங் போர்டு பகுதியில், குடும்பத்தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மருமகன் தனது மாமியார் லலிதா என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொலையுறுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் குற்றவாளியின் இருசக்கர வாகனச் சாவியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த லலிதாவின் மகள் லட்சுமி கூறுகையில், தன் கணவன் தான் வேலைக்குச் செல்வதைச் சந்தேகப்பட்டு வந்ததாகவும், வேலைக்குச் செல்லக் கூடாது எனத் தொடர்ந்து தடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தச் சந்தேகமும் குடும்பப் பிரச்சினையுமே இக்கொடூரச் சம்பவத்திற்குக் காரணமாக அமைந்தது. தன் தாயின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லட்சுமி மயக்கமடைந்தார்.

Advertisement

இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதீர் ஜோஷி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி மற்றும் கோட்வாலி காவல் நிலையப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் கள ஆய்வு செய்து முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பிணவறைக்கு அனுப்பி வைத்துள்ள காவலர்கள், தப்பியோடிய மருமகனைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in