LATEST NEWS
“ஐயோ..! 9-வது மாடி ஜன்னலில் தொங்கிய சிறுமிகள்…” காப்பாற்றிய நபருக்கு நன்றி சொல்வதற்கு பதிலாக தாய் செய்த பகீர் காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!!
இன்று காலை பெய்த லேசான தூறலின் போது பால்கனியில் அமர்ந்திருந்த ஒரு நபர், எதிரே இருந்த கட்டிடத்தின் 9-வது மாடி ஜன்னல் விளிம்பில் இரண்டு சிறுமிகள் ஆபத்தான முறையில் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தச் சிறுமிகள் மழத்துளிகளைத் தங்களது கைகளால் பிடிப்பதற்காக, ஜன்னல் கிரில் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் வெளியே ஆபத்தாகத் தொங்கிக் கொண்டிருந்துள்ளனர். இதைப் பார்த்து நெஞ்சு பதறிய அந்த நபர், ஆபத்தைத் தடுக்கும் நோக்கில் குழந்தைகளை நிறுத்தச் சொல்லி சத்தமாகக் கத்தியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த இரண்டு சிறுமிகளும் உடனடியாக ஜன்னலை விட்டு இறங்கி அறைக்குள் ஓடியுள்ளனர்.
ஆனால், இதன் பிறகு ஜன்னல் அருகே வந்த குழந்தைகளின் தாய், ஆபத்திலிருந்து தன் குழந்தைகளைக் காப்பாற்றிய நபருக்கு நன்றி கூறுவதற்குப் பதிலாக, “என் குழந்தைகளை ஏன் திட்டினாய்?” என்று சண்டைக்கு வந்துள்ளார். தன் குழந்தைகள் 9-வது மாடியில் இருந்து கீழே விழும் அபாயத்தில் இருந்ததை உணராத அந்தத் தாயின் அலட்சியப் போக்கும், தட்டிக் கேட்டவருடன் வந்து வாதாடிய அவரது அறியாமையும் அந்த நபரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பெற்றோர்களின் இத்தகைய ஆபத்தான அலட்சியம் மற்றும் தவறான அணுகுமுறை குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்து வருகின்றன.
