CRIME
பகீர்.. நடுரோட்டில் அலறிய நர்ஸ்… ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திய கணவன்..! நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்… பதறவைக்கும் பின்னணி..!!
பெங்களூருவின் ஜே.பி. நகரில் உள்ள நாராயண கிளினிக் அருகே வியாழக்கிழமை காலை சுமார் 9:15 மணியளவில் 26 வயதான மதுமிதா என்ற செவிலியர் மீது அவரது கணவர் வெங்கடேஷ் என்பவர் ஆசிட் போன்ற திரவத்தை ஊற்றி, கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்த மதுமிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஜே.பி. நகர் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட கணவர் வெங்கடேஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று வெங்கடேஷ் இருசக்கர வாகனத்தில் கத்தி, கூர்மையான ஆயுதம் மற்றும் ஆசிட் போன்ற திரவத்துடன் மதுமிதாவைத் தாக்க வந்துள்ளார். அவர் முதலில் மதுமிதா மீது அந்தத் திரவத்தை ஊற்றி, பின்னர் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் பெண்மணியைக் காப்பாற்ற முயன்றதுடன், வெங்கடேஷைத் தடுக்க அவர் மீது கற்களையும் வீசியுள்ளனர். இருப்பினும், தன்னைக் காப்பாற்ற வந்த பொதுமக்களையும் வெங்கடேஷ் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மதுமிதாவிற்கும் வெங்கடேஷிற்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மதுரையில் திருமணம் நடைபெற்றது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். மதுமிதா பெங்களூருவில் தங்கி செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில், வெங்கடேஷ் சமீபத்தில் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். மனைவியைத் தாக்குவதற்காகவே வெங்கடேஷ் மதுரையிலிருந்து பெங்களூருவிற்கு வந்துள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட திரவம் என்ன என்பது குறித்தும், இந்தத் தாக்குதலுக்கான பின்னணி குறித்தும் பெங்களூரு தெற்கு பிரிவு துணை ஆணையர் (DCP) டாக்டர் வம்சிகிருஷ்ணா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
