LATEST NEWS
“ச்ச.. இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு மனுஷனா..?! “ஜிம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா ரூ. 2 லட்சம் லேப்டாப் காணல… கதறித் துடிச்சு 4 கி.மீ தூரம் மழையில தேடி அலைஞ்ச இளைஞர்…. ஈ-ரிக்ஷா ஓட்டுநர் செய்த அந்த ஒரு காரியம்.. பெங்களூரு வீதியில் நடந்த நிஜ சினிமா சீன்..!!!
ஹர்ஷித் சுரேகா ஜிம்மில் இருந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பெங்களூருவில் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரது பைக்கின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ‘டாப் பாக்ஸ்’ கழன்று வழியிலேயே விழுந்துவிட்டது. ஆனால், மழை தீவிரமாக இருந்ததால் பெட்டி விழுந்தது அவருக்குத் தெரியாமல் அவர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோதே, பாக்ஸ் காணாமல் போன அதிர்ச்சி செய்தி அவருக்குத் தெரியவந்தது. அதில் அவரது ரூ.2 லட்சம் மதிப்புள்ள மேக்புக், ஒரு தனிப்பட்ட டைரி மற்றும் பல முக்கியமான பொருட்கள் இருந்தன.
பொருட்களை மீட்க உடனடியாக ஹர்ஷித் மீண்டும் தனது பைக்கை எடுத்துக்கொண்டு, ஜிம்மில் இருந்து வீடு வரை வந்த 3 முதல் 4 கிலோமீட்டர் தூர பாதையில் தீவிரமாகத் தேடத் தொடங்கினார். வழியில் சென்ற மக்களிடம் பெட்டி ஏதேனும் விழுந்ததை பார்த்தீர்களா என்று விசாரித்துக் கொண்டே சென்றார். அப்போது, சாலையில் கிடந்த அந்தப் பெட்டியை அவ்வழியாகச் சென்ற ஒரு ஈ-ரிக்ஷா ஓட்டுநர் எடுத்துச் சென்றதாக ஒருவர் ஹர்ஷித்திடம் கூறினார்.
https://www.instagram.com/reel/DcqVuCPObEl/?utm_source=ig_web_button_share_sheet
இந்தத் தகவலின் அடிப்படையில் ஹர்ஷித் அந்த ஈ-ரிக்ஷா ஓட்டுநரைக் கண்டுபிடித்தார். ஓட்டுநர் எந்தப் பொருளையும் சேதப்படுத்தாமல், லேப்டாப், டைரி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பாக ஹர்ஷித்திடம் ஒப்படைத்தார். ஓட்டுநரின் இந்த உயரிய நேர்மையைப் பாராட்டி ஹர்ஷித் அவருக்குப் பணமாகப் பரிசு வழங்க முயன்றபோதும், அந்த ஈ-ரிக்ஷா ஓட்டுநர் எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் மனிதநேயத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியதாக ஹர்ஷித் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
