“ஐயோ என்ன கொடுமை இது..! கருப்பைக் கட்டி ஆபரேஷன்.. ஆனா ஸ்கேன் ரிப்போர்ட்டில் காணாமல் போன ‘அந்த’ முக்கிய உறுப்பு.. டாக்டர் அலட்சியத்தால் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீருடன் கதறும் குடும்பத்தினர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ என்ன கொடுமை இது..! கருப்பைக் கட்டி ஆபரேஷன்.. ஆனா ஸ்கேன் ரிப்போர்ட்டில் காணாமல் போன ‘அந்த’ முக்கிய உறுப்பு.. டாக்டர் அலட்சியத்தால் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீருடன் கதறும் குடும்பத்தினர்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் அலேருவில் உள்ள ‘அர்பிதா நர்சிங் ஹோம்’ என்ற தனியார் மருத்துவமனையில், கருப்பைக் கட்டி அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் சிறுநீரகம் அசுரத்தனமாக அகற்றப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் பேராதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யாதகிரிகுட்டாவைச் சேர்ந்த கமலம்மா என்ற பெண்ணுக்குக் கருப்பையில் ஃபைப்ராய்டு கட்டி இருப்பதாகக் கூறி, சுமார் 45 நாட்களுக்கு முன்பு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் வேறொரு இடத்தில் ஸ்கேன் செய்து பார்த்த போதுதான், அவரது உடலின் மிக முக்கிய உறுப்பான வலது சிறுநீரகம் அடியோடு காணாமல் போயிருப்பது அச்சு அசலாகத் தெரியவந்து குடும்பத்தினரை உ உறைய வைத்துள்ளது.

https://twitter.com/pulsenewsbreak/status/2095830734007410978/video/1

Advertisement

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலேரு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை காரசாரமாக எதிர்கொண்ட போது, அவர் கொடுத்த விளக்கம் இன்னும் அசிங்கமான நரகச் சூழலை உருவாக்கியுள்ளது; அதாவது, “கொழுப்புக் கட்டி என்று தவறாக நினைத்து சிறுநீரகத்தை அகற்றிவிட்டேன்” என்று அந்த மருத்துவர் சற்றும் குற்ற உணர்ச்சியின்றி ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் குதித்ததால் அங்கே விவாதப் புயலும் பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலேரு காவல்துறையினர், அந்தப் பொறுப்பற்ற மருத்துவரை அதிரடியாக வளைத்துப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி அசுர ஆப்பு அடிக்கத் தயாராகி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in