CRIME
“எல்லா நாயையும் சுட்டுத் தள்ளிடுவேன்… ஏர் கன் மூலம் தெரு நாய்களை சுட்ட கொடூரம்… தட்டிக்கேட்ட பெண் மருத்துவருக்கு மிரட்டல்…” 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி… PETA அமைப்பின் மின்னல் வேக அதிரடி ஆக்ஷன்..!!!
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஷிவ்பூர் பகுதியில், ‘டிங்கோ’ மற்றும் ‘குங்ரூ’ என்ற இரு தெரு நாய்களை ஒருவர் ஏர் கன் மூலம் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் விவரப்படி, ஆகஸ்ட் 18 அன்று இரவு சுமார் 10:20 மணிக்கு அவினாஷ் சந்திர சின்ஹா என்பவர் டிங்கோ என்ற நாயை ஏர் கன் மூலம் சுட்டுள்ளார். அந்த நாய்களைப் பராமரித்து வரும் டாக்டர் அகான்ஷா சிங் இது குறித்துக் கேட்டபோது, அந்த நபர் துப்பாக்கியைப் பயன்படுத்தி அனைத்து நாய்களையும் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அடுத்த நாள் காலையில், குங்ரூ என்ற மற்றொரு நாயும் கழுத்துப் பகுதியில் சுடப்பட்டுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த இரு நாய்களுக்கும் அவசர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிா்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது அவை பராமரிப்பாளரின் பாதுகாப்பில் உள்ளன.
இந்தச் கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, PETA இந்தியா அமைப்பானது வாரணாசி காவல்துறை அதிகாரிகள், டாக்டர் அகான்ஷா சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருடன் இணைந்து சட்டப் நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக, குற்றஞ்சாட்டப்பட்ட அவினாஷ் சந்திர சின்ஹா மீது பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 325 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன் பிரிவு 11 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS பிரிவு 325-ன் படி, விலங்குகளைக் கொல்வது அல்லது கொடுமைப்படுத்துவது போன்ற செயல்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வழக்குப் பதிவுக்கு ஆதரவளித்த வாரணாசி மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு PETA இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், விலங்குகளை வேண்டுமென்றே துன்புறுத்துபவர்களுக்கு மனநலப் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும் என்று PETA வலியுறுத்தியுள்ளது. விலங்குகளிடம் கொடூரமாக நடந்துகொள்பவர்கள், கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை மற்றும் அச்சுறுத்தல் போன்ற பிற குற்றங்களில் ஈடுபட 3 மடங்கு அதிக வாய்ப்புள்ளதாகப் ஆய்வுகள் தெரிவிப்பதாக PETA சுட்டிக்காட்டியுள்ளது.
