LATEST NEWS
“இவனுக்கு சர்வதேச அங்கீகாரம் தரணும்…” ஒருத்தன் நெனச்சா என்ன வேணா பண்ணலாம்… தனியாளாக ஒரு நதியையே மீட்டெடுத்த மத்தியப் பிரதேச வாலிபர்…! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனே வியந்து பாராட்டிய மிரட்டல் சம்பவம்..!!
சமூக வலைதளங்களின் ஆற்றல் யாவரும் அறிந்ததே; அது பல அறியப்படாத முகங்களை உலகறியச் செய்துள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி செய்துள்ள அசாதாரண காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது ஊரின் நதியைத் தனது சொந்த முயற்சியால் தனியாளாகச் சுத்தம் செய்து பிட்டு புகழின் உச்சிக்குச் சென்றுள்ளார். இவரின் இந்த நற்செயல் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் இவருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
https://www.instagram.com/p/Dc2z6K4jeuv/?utm_source=ig_web_button_share_sheet
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பிட்டு சிங் ரகுவன்ஷி, இன்ஸ்டாகிராமில் ‘பிட்டு தபாஹி’ என்ற கணக்கை நடத்தி வருகிறார். அறிவியல் பட்டதாரியான இவர், தனது சிறிய நகரமான பயாவ்ராவில் அமைந்துள்ள ‘அஜ்னார்’ நதியின் நிலையையே முற்றிலும் மாற்றிக்காட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த நதி குப்பைக் கூளங்களாலும் அடர்ந்த காட்டுச் செடிகளாலும் சூழப்பட்டு மிக மோசமாக மாசடைந்திருந்தது. ஆனால், தனது ஊர் நதியை மாற்றிக் காட்டுவேன் என உறுதியேற்ற பிட்டு, அரசு அல்லது எந்தவொரு அமைப்பின் உதவியும் இன்றி, தானே அனைத்துக் கழிவுகளையும் காட்டுப் புற்களையும் அகற்றி நதியைத் தூய்மையாக்கி மிளிரச் செய்துள்ளார்.
பிட்டுவின் இந்த அற்புதச் செயலைக் கண்ட இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரைப் பாராட்டி ஒரு சிறப்பான பதிவை வெளியிட்டுள்ளார். பிட்டு தபாஹியின் கதையைப் பகிர்ந்துள்ள பீட்டர்சன், பிட்டு தபாஹி பெயரின் ஆங்கிலப் பொருளைக் குறிப்பிட்டு, “அவர் நீர் மாசுபாட்டை ‘தபாஹி’ செய்கிறார்; ஏனெனில், ஒருவர் மற்றொருவருக்காகக் காத்திருப்பதை நிறுத்தும்போதுதான் மாற்றம் தொடங்குகிறது” என்று எழுதியுள்ளார். மேலும், பிட்டு தபாஹிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பீட்டர்சனின் இந்தப் பதிவு உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்து, பிட்டுவின் புகழைப் பல நாடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளது.
